ETV Bharat / state

கடல் வழியாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற நபர்கள் கைது!

author img

By

Published : Sep 3, 2021, 7:53 AM IST

திருவள்ளூர்: கடல் மார்க்கமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தியவர்கள்
ரேஷன் அரிசி கடத்தியவர்கள்

திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு, சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், இதனைத் தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சாத்தான்குப்பத்திலிருந்து கடல் வழியாக இரண்டு பேர் ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தபோது, மூர்த்தி (53) அவரது மகன் ராஜ் குமார் (22) ஆகிய இருவரும் மரப் படகில் ஒன்பது டன் ரேஷன் அரிசியைக் கடத்த முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையினர் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், இக்கடத்தலில் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பிரசாந்த்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள அவரை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட மூர்த்தி, ராஜ் குமார் ஆகியோரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.